தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
‛ஹீரோபன்டி', ‛தில்வாலே' படங்களில் நடித்தவர் நடிகை கிர்த்தி சனோன். தற்போது ராப்தா படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் மிகவும் அதிர்ஷ்டசாலி என்று கூறியுள்ளார். இதுப்பற்றி அவர் மேலும் கூறியிருப்பதாவது... ‛‛உண்மையிலேயே நான் மிகவும் அதிர்ஷ்டக்கார பெண் தான். ஏனென்றால் குறுகிய காலத்திலேயே என்னை ரசிகர்கள் அடையாளம் கண்டுவிட்டனர். நான் நடிகையாவேன் என்று ஒருபோதும் நினைத்தது கிடையாது. சினிமா தொடர்பாக எனக்கென்று யாரும் காட்பாதர் கிடையாது. யாருடைய உதவியுமின்றி இந்தளவுக்கு நானே முன்னேறி வந்துள்ளேன். மேலும் நானே அனைத்தையும் கற்று வருகிறேன், தவறுகளையும் திருத்தி கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.