மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
கடந்த சில நாட்களுக்கு முன்னர் சஞ்சய் லீலா பன்சாலி இயக்கும் ‛பத்மாவதி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்கியதோடு ஷூட்டிங் ஸ்பாட்டை தீ வைத்தும் கொளுத்தினர். இதனால் படம் சம்பந்தப்பட்ட ஏராளமான பொருட்கள் தீயில் கருகி நாசமாகின. பத்மாவதி படக்குழு மீது இரண்டாவது முறையாக இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதுதொடர்பாக திரையுலகினர் பலரும் சஞ்சய்க்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் நிலையில் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோகரும் பன்சாலிக்கு குரல் கொடுத்துள்ளார்
பாகுபலி-2 படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மும்பையில் நடந்தது. அப்போது இதுப்பற்றி பேசிய கரண் ஜோகர், என்ன நடந்தது என்று சஞ்சய் லீலா பன்சாலியுடன் பேசினேன். ஒரு சினிமாக்காரனாக மிகவும் வருந்தினேன். இந்திய போன்ற அருமையான நாட்டில் இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் வருத்தப்பட செய்கின்றன. சஞ்சய்க்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. அவருக்கு எப்படி ஆறுதல் கூறுவது என்றே தெரியவில்லை. ஒவ்வொரு முறையும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கின்றன. இந்தமாதிரி சூழலில் நாம் அனைவரும் சஞ்சய் லீலா பன்சாலி மற்றும் அவரது படக்குழுவுக்கு குரல் கொடுக்க வேண்டும். இனி இதுபோன்று ஒரு சம்பவம் எந்த ஒரு தயாரிப்பாளருக்கும் நடக்காது என நம்புகிறேன் என்றார்.