டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
செல்பி எடுக்கிறேன் பேர்வழி என்று ரசிகர் ஒருவர் தோளில் கைபோட்டதால் அவர் மீது கோபத்தை வெளிப்படுத்தினார் நடிகை வித்யாபாலன். பாலிவுட்டின் மிகச்சிறந்த நடிகைகளில் வித்யாபாலனும் ஒருவர். வித்தியாசமான ரோல்களில் மிகவும் போல்ட்டான வேடங்களில் நடிப்பவர். இவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் ‛பேகம் ஜான். பாலியல் தொழிலாளர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு இப்படம் உருவாகி உள்ளது. இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் இப்படம் தொடர்பாக வித்யாபாலன், இயக்குநர் ஸ்ரீஜித் முகர்ஜி உள்ளிட்டோர் கோல்கட்டா சென்றுள்ளனர். அங்கு விமான நிலையத்தில் ரசிகர் ஒருவர், வித்யாபாலன் உடன் செல்பி எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு அவரும் சம்மதம் சொல்ல, அந்த ரசிகர்கள் வித்யாபாலன் அருகில் நெருங்கி வந்ததோடு அவர் தோள் மீது கைப்போட்டு செல்பி எடுக்க முன்வந்துள்ளார். உடனே, வித்யாபாலன் அந்த ரசிகரை எச்சரித்துள்ளார். ஆனாலும் அந்த ரசிகர் மீண்டும் அவர் தோள் மீது கைப்போட்டு செல்பி எடுக்க முயல, அந்த ரசிகரிடம் இது சரியில்லை, இதுபோன்று நடப்பது தவறு என்று தன் கோபத்தை வெளிப்படுத்தினார் வித்யாபாலன். வித்யா, தன் குரலை சற்று உயர்த்தி பேசியதுமே அந்த ரசிகர் உடனடியாக அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார். அவர் இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.
இதுப்பற்றி வித்யாபாலன் கூறுகையில், ‛‛ஆணாக இருக்கட்டும், பெண்ணாக இருக்கட்டும், பொதுவாக முகம் தெரியாத ஒருவர் திடீரென நெருங்கும் போது சற்று அசவுகரியமாக இருக்கும். பிரபலமான நான் பொதுவானவர் தான்... ஆனால் பொது சொத்து அல்ல என்றார்.