'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் முன்னணி நடிகை ஐஸ்வர்யா ராய். அமிதாப் பச்சன் வீட்டு மருமகளான பின்பும் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார். குழந்தை பிறப்பால் சில காலம் சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்தவர் 2015-ம் ஆண்டு ஜாஸ்பா படத்தின் மூலம் ரீ-என்ட்ரியானார். தொடர்ந்து இவரது நடிப்பில் கடந்தாண்டு ‛சரப்ஜித்', ‛ஏய் தில் ஹே முஷ்கில்' படங்கள் வெளியாகின. தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஐஸ்வர்யா ராயின் தந்தை கிருஷ்ண ராஜ், உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை மோசமாக இருப்பதால் தீவிர சிகிச்சை பிரிவான ‛ஐசியு'-வில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் உடன் இருந்து கவனித்து வருகிறார்கள். இதன்காரணமாக அமிதாப் பச்சன் குடும்பத்தார், இந்தாண்டு ஹோலி பண்டிகையை கூட கொண்டாடவில்லை.