தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபல இயக்குநர் மகேஷ் பட். இவரின் வாரிசு நடிகை ஆலியா பட். ஸ்டூடண்ட் ஆப் தி இயர் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஆலியா, தொடர்ந்து பல ஹிட் படங்களில் நடித்துள்ளார். டியர் ஜிந்தகி படத்தை தொடர்ந்து ‛பத்ரிநாத் கி துல்கனியா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம் மார்ச் 10-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இப்படம் பற்றியும், அதில் நடித்த அனுபவம் பற்றியும் நம்மோடு அவர் பகிர்ந்து கொண்டதாவது...
படத்தில் உங்க கேரக்டர் பற்றி சொல்லுங்க.?
வைதேகி திரிவேதி என்ற கேரக்டரில் நடிக்கிறேன். லட்சியம் உடைய ஒரு பெண். சிறிய நகரத்தில் வசித்தாலும் நிறைய முற்போக்கு சிந்தனை உடையவள். விமான பணிப்பெண்ணாக வேண்டும் என்பதே அவளது ஆசை, தனக்கு எல்லாம் தெரியும் என்பது மாதிரியான ஒரு கேரக்டர்.
வருண் உடன் நடித்த அனுபவம், அவரிடம் ஏதும் மாற்றம் உள்ளதா..?
வருணும், நானும் இணைந்து நடித்துள்ள மூன்றாவது படம் இது. இயற்கையிலேயே தன்னை ஒரு குழந்தை போன்று நினைத்து கொள்வார். அவருடன் நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஒரேக்காலகட்டத்தில் ஒரே படத்தில் சினிமாவில் அறிமுகமானோம். வருணிடம் உள்ள ஒரே மாற்றம், இப்போது கொஞ்சம் அமைதியாக இருக்கிறார், இது நல்ல விஷயம். இயக்குநர்களை முழுமையாக நம்ப தொடங்கியுள்ளார். மற்றபடி அவரிடத்தில் வேறு எந்த மாற்றமும் இல்லை. அவர் அவராகத்தான் உள்ளார்.
படம் ரிலீஸாகும் போது உங்களுக்கு ஏதும் பயம் வருமா..?
ஒரு போதும் பயந்தது கிடையாது. நான் எப்போதும் போல் கூலாக இருப்பேன். நல்ல கதை உடைய படம் எப்போதும் வெற்றி பெறும் என்று நம்புகிறேன். அதேசமயம், படம் ரிலீஸாகும் முதல்நாள் அன்று கொஞ்சம் டென்சனாக இருக்கும். ஆகவே, படம் ரிலீஸாகும் வரை கொஞ்சம் பரபரப்பாக இருந்து அந்த டென்ஷனிலிருந்து விடுபட்டு கொள்வேன், மற்றபடி பயம் எல்லாம் கிடையாது.
ஸ்டூடண்ட் ஆப் தி இயர் முதல் இப்போது வரை உங்கள் சினிமா பயணத்தை எப்படி பார்க்கிறீர்கள்.?
2012, ஸ்டூடண்ட் ஆப் தி இயர் ரிலீஸானது. அப்போது முதல் இப்போது வரை எட்டு அல்லது ஒன்பது படங்களில் நடித்துவிட்டேன், மகிழ்ச்சியாக இருக்கிறது. கரண் ஜோகர், அபிஷேக் சவுபே, சசாங் கைத்தான், இம்தியாஸ் அலி போன்ற பல திறமையான இயக்குநர்கள் உள்ளார்கள். சினிமாவில் இப்போது விபரம் தெரிந்த பெண்ணாகிவிட்டேன். படம் இயக்குவதை பற்றி எனக்கு நன்றாக தெரியும். சினிமாவில் நாளுக்கு நாள் எனது தன்னம்பிக்கை வளர்ந்து கொண்டே செல்கிறது.
ஆஷிக்-3யில் நிலை என்ன.?, நீங்கள் நடிக்கிறீர்களா..?
ஆஷிக்-3யில் நான் நடிக்கிறேன், ஆனால் அந்தப்படம் துவங்க கொஞ்ச நாளாகும். ஏனென்றால் இயக்குநர் மொகித் சூரி தனது ‛ஹால்ப் ஹேர்ள்பிரண்ட்' படத்தில் பிஸியாக உள்ளார். அதேப்போல், நானும் எனது அடுத்தப்படமான ‛பேகம் ஜான்' படத்தில் பிஸியாக இருக்கிறேன். ஆகையால் ஆஷிக்-3க்கு கால்ஷீட் கொடுக்க முடியவில்லை. அடுத்தாண்டு படத்தை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நீங்கள் எப்போது தயாரிப்பாளராக மாறப்போறீங்க.?
தயாரிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும், எனக்கும் படம் தயாரிக்க ஆசை உள்ளது, நிச்சயம் படம் தயாரிப்பேன், விரைவில் அது நடக்கும், அந்த நேரத்திற்காக நானும் காத்திருக்கிறேன்.