டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். நடிகையில் இருந்து தயாரிப்பாளராகவும், பாடகியாகவும் மாறி தனது திறமையை மேலும் வளர்த்து கொண்டே போகிறார். தற்போது, அவர் ‛பில்லாரி என்ற படத்தில் தில்ஜித் தோஸ்னாவுடன் நடித்துள்ளார். கூடவே ஒரு ராப் பாடலும் பாடியிருக்கிறார். இரண்டு வாரங்களில் படம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலையில் பிஸியாக உள்ளார் அனுஷ்கா. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா, பேயாக நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்தார்.
அப்போது அவர் பேசுகையில், படத்தில் பேயாக நடித்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. பொதுவாக நடிகர்கள் உயிர் உள்ளவர் போன்று தான் அதிகம் நடிப்பர். ஆனால், இந்தப்படத்தில் உயிரில்லாமல் நடித்தது மிகவும் அருமையாகவும், ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. எப்பவும் வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்றவர், பேயயை ஆதரித்தும் பேசினார்.
‛பில்லாரி'படம் வருகிற மார்ச் 24-ம் தேதி ரிலீஸாக உள்ளது.