அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். நடிகையில் இருந்து தயாரிப்பாளராகவும், பாடகியாகவும் மாறி தனது திறமையை மேலும் வளர்த்து கொண்டே போகிறார். தற்போது, அவர் ‛பில்லாரி என்ற படத்தில் தில்ஜித் தோஸ்னாவுடன் நடித்துள்ளார். கூடவே ஒரு ராப் பாடலும் பாடியிருக்கிறார். இரண்டு வாரங்களில் படம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலையில் பிஸியாக உள்ளார் அனுஷ்கா. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா, பேயாக நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்தார்.
அப்போது அவர் பேசுகையில், படத்தில் பேயாக நடித்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. பொதுவாக நடிகர்கள் உயிர் உள்ளவர் போன்று தான் அதிகம் நடிப்பர். ஆனால், இந்தப்படத்தில் உயிரில்லாமல் நடித்தது மிகவும் அருமையாகவும், ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. எப்பவும் வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்றவர், பேயயை ஆதரித்தும் பேசினார்.
‛பில்லாரி'படம் வருகிற மார்ச் 24-ம் தேதி ரிலீஸாக உள்ளது.