வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் அனுஷ்கா சர்மாவும் ஒருவர். நடிகையில் இருந்து தயாரிப்பாளராகவும், பாடகியாகவும் மாறி தனது திறமையை மேலும் வளர்த்து கொண்டே போகிறார். தற்போது, அவர் ‛பில்லாரி என்ற படத்தில் தில்ஜித் தோஸ்னாவுடன் நடித்துள்ளார். கூடவே ஒரு ராப் பாடலும் பாடியிருக்கிறார். இரண்டு வாரங்களில் படம் ரிலீஸாக இருப்பதால் படத்தின் புரொமோஷன் வேலையில் பிஸியாக உள்ளார் அனுஷ்கா. சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பங்கேற்ற அனுஷ்கா, பேயாக நடித்த அனுபவம் பற்றி மனம் திறந்தார்.
அப்போது அவர் பேசுகையில், படத்தில் பேயாக நடித்தது மிகவும் வேடிக்கையாக இருந்தது. பொதுவாக நடிகர்கள் உயிர் உள்ளவர் போன்று தான் அதிகம் நடிப்பர். ஆனால், இந்தப்படத்தில் உயிரில்லாமல் நடித்தது மிகவும் அருமையாகவும், ஒரு வித்தியாசமான அனுபவமாகவும் இருந்தது. எப்பவும் வித்தியாசமான படங்களில் நடிக்க வேண்டும் என்றவர், பேயயை ஆதரித்தும் பேசினார்.
‛பில்லாரி'படம் வருகிற மார்ச் 24-ம் தேதி ரிலீஸாக உள்ளது.