தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின் பிரபலமான இயக்குனர் கரண் ஜோஹர். குச்சு குச்சு ஹோத்தா ஹை படத்தின் மூலம் அறிமுகமான கரண் ஜோகர், ஏராளமான படங்களை இயக்கி, தயாரித்து உள்ளார். இந்த ஆண்டு மட்டும் ‛ஓகே ஜானு, ‛பத்ரிநாத் கி துல்ஹனியா, ‛டிராகன், ‛டிரைவ் என நான்கு படங்களை தயாரிக்கிறார்.
44 வயதாகும் கரண் ஜோஹர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கடைசி வரை திருமணம் செய்து கொள்ளப்போவதில்லை என்றும் அறிவித்திருக்கிறார். ஆனாலும் குழந்தைகள் மீது கரணுக்கு ஆசை அதிகம். அதனால் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்பினார். இதற்காக இவரது குடும்ப டாக்டர் ஜதின் ஷாவை ஆலோசித்தார். அவரது ஏற்பாட்டின்படி வாடகை தாய் அமர்த்தி கரண் ஜோஹருக்கு குழந்தை பெற்றுத் தர வாடகை தாய் ஏற்பாடு செய்யப்பட்டது. கரணின் அதிர்ஷ்டம் அந்த வாடகை தாய்க்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. அந்த குழந்தைகளுக்கு ரூஹி, யாஷ் என்று பெயரிட்டுள்ளார்.
இந்த தகவல்களை தனது சமூகவலைதளத்தில் வெளியிட்டிருக்கும் கரண் ஜோஹர், "மருத்துவ அறிவியலின் அற்புதத்தால் நான் தந்தை ஆகியுள்ளேன். ஒரு தந்தையாக என்னை மன ரீதியாக தயார் செய்து விட்டேன். இனி என் குழந்தைகள் தான் என் உலகம். என் கனவை நனவாக்கிய வாடகை தாய்க்கும், எனது மருத்துவர் ஜதின் ஷாவுக்கு நன்றி உள்ளவனாக இருப்பேன்" என்ற பேஸ்புக்கில் பதிவிட்டிருக்கிறார்.