அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
உலக சினிமாவின் உயர்ந்த விருது வழங்கும் விழாவான ஆஸ்கர் விருது வழங்கும் விழா நேற்று கோலாகலமாக நடந்தது. இந்த விழாவில் இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, பிரிடா பின்டோ, தி லயன் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் சன்னி பவார், இந்தியாவை சேர்ந்த ஹாலிவுட் நடிகர் தேவ் படேல், அவரது தாய் அனிதா என இந்திய முகங்கள் அதிகமாக காணப்பட்டார்கள்.
ஆஸ்கர் விழாவில் மறைந்த ஹாலிவுட் நட்சத்திர கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். இந்த ஆண்டு சமீபத்தில் மறைந்த இந்திய நட்சத்திரமான ஓம்புரிக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கிராமிய விருது பாடகி சாரா பெராரிஸ் ஓம்புரிக்கு இசை அஞ்சலி செலுத்தினார். அப்போது எல்லோரும் மவுனமாக எழுந்து நின்றனர். ஈஸ்ட் இஸ் ஈஸ்ட், காந்தி, சிட்டி ஆஃப் ஜாய், உல்ப் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தவர் ஓம்புரி என்பது குறிப்பிடத்தக்கது.