தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தமிழ்த் திரையுலகத்தையும், வசூல் விவரங்களையும் பிரிக்கவே முடியாது. ஒரு படம் வெளிவந்த இரவே படம் வெற்றி என்று தயாரிப்பாளர்களும், நடிகர்களும் கொண்டாடுவதைப் பற்றி பிரபல வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் கடந்த வாரம் கருத்து தெரிவித்திருந்தார். 'கபாலி' உட்பட 7 பெரிய படங்கள் நஷ்டத்தைத்தான் கொடுத்தன என்றும் கூறியிருந்தார். அதற்கு சில 'கபாலி' வினியோகஸ்தர்களும் படம் தங்களுக்கு லாபம்தான் கொடுத்தது என்று கருத்து தெரிவித்தினர்.
இதனிடையே, சமீபத்திய பேட்டி ஒன்றில் தன் கருத்தின் தொடர்ச்சியாக மேலும் சில விஷயங்களை திருப்பூர் சுப்பிரமணியம் கூறியிருக்கிறார். படம் வெளிவந்த உடனேயே, தவறான வசூல் விவரங்களைக் கொடுப்பதை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்த வேண்டும். அப்படியில்லை என்றால் மாதா மாதம் கூடும் வினியோகஸ்தர்கள் கூட்டத்தில் ஒவ்வொரு படத்தையும் வாங்கிய விலை என்ன ?, அவை வசூலித்தத் தொகை என்ன ? போன்ற விவரங்களை வெளியிடுவோம் என அவர் கூறியிருக்கிறார்.
முன்னணி நடிகர்கள் நடிக்கும் படங்களுக்குத்தான் 100 கோடி வசூல் என்று சொல்வது கடந்த சில வருடங்களாக ஃபேஷன் ஆக ஆகிவிட்டது. ஆனால், உண்மையிலேயே எத்தனை படங்கள் 100 கோடியைத் தொட்டன என்பது சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்களுக்கே தெரியும் என பெயரிட விரும்பாத திரையுலகப் பிரமுகர் ஒருவர் தெரிவிக்கிறார்.
இந்த வசூல் விவகாரம் இப்போதைக்கு ஓயாது என்றே தெரிகிறது.