தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட்டின், பிரபல இயக்குநர்களில் ஆனந்த் எல்.ராயும் ஒருவர். இவரின் அடுத்தப்படத்தில் நடிகர் ஷாரூக்கான் நடிப்பது அனைவரும் அறிந்த செய்தி தான். ஹீரோயின் மட்டும் முடிவாகமல் இருந்த நிலையில், இப்போது யார் நடிக்க போகிறார் என்ற கேள்விக்கு விடை கிடைத்திருக்கிறது. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளாக இருக்கும் தீபிகா, கத்ரீனா இருவரும் இப்படத்தில் இணைந்து நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
தன் படத்தில் நடிப்பது தொடர்பாக இயக்குநர் ஆனந்த், நிறைய நடிகைகளிடம் பேசியதாகவும், இறுதியாக தீபிகா மற்றும் கத்ரீனாவிடம் பேசி நடிக்க சம்மதம் வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும் இருவருக்குமே முக்கியமான சமமான ரோல் அளிக்கப்பட்டுள்ளதாம். இதுப்பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு விரைவில் வெளியிட இருக்கிறது. படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க உள்ளது. இதில் ஷாரூக்கான், இதுவரை தான் நடித்திராத ஒரு வித்தியமான ரோலான குள்ள மனிதராக நடிக்க உள்ளார்.