'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் |
பாலிவுட்டில் முன்னணி நடிகராக திகழும் ஷாரூக்கானுக்கு, இந்தாண்டு யாஷ் சோப்ரா விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இதற்கான விழா மும்பையில் நேற்று நடந்தது. விருதை பெற்று கொண்ட பின்னர் பேசிய ஷாரூக்கான்... ‛‛என்னுடைய 25 ஆண்டுகால சினிமா வரலாற்றில் என்னுடைய பெரும்பாலான படங்கள் யாஷ் ராஜ் பிலிம் தயாரிப்பாகத்தான் இருக்கும். என்னை அவர், ஒரு மகன் போன்று தான் பாவித்தார். நான் ஒன்றும் அழகான நடிகர் கிடையாது, ரொமான்ட்டிக் ரோலில் நடிக்க ஏற்ற தோற்றமும் என்னிடம் இல்லை. இருந்தாலும் யாஷ் சோப்ரா என்னிடம், நீ ரொமான்ட்டிக் படங்களில் நடிக்கவில்லை என்றால் உன் சினிமா பயணம் சிறப்பாக இருக்காது என்றார். அவரது அறிவுரையை ஏற்று, அவர் சொன்னபடி பயணித்தேன், அதற்கான பலனும் கிடைத்தது. என் சினிமா கேரியரில் யாஷ் ராஜ் சோப்ராவின் பங்கு, அவரது தனிக்கவனம் மிக முக்கியமானது'' என்று கூறியுள்ளார்.