இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகை பாவனாவுக்கு நடந்த கொடுமைக்கு பிறகு அவருக்கு பக்கபலமா இருந்து செயல்பட்டவர் பிருத்விராஜ். இனி நடிக்க மாட்டேன் என்று அறிவித்த பாவனாவை சமாதானப்படுத்தி மீண்டும் நடிக்க அழைத்து வந்திருப்பது பிருத்விராஜ்தான். இந்த நிலையில் இனி பெண்களை இழிவுபடுத்தும் கேரக்டர்களில் நடிக்க மாட்டேன் என்று அவர் அறிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டரில் அவர் பதிவிட்டிருப்பதாவது:
பாவனாவிடமிருந்த மனோதிடமே அவரை இந்த இக்கட்டிலிருந்து விடுவித்துள்ளது. பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து தீவிரமாக யோசிக்க வேண்டிய நேரம் இது. இனி நான் பெண்களை வக்கிரமாக சித்தரிக்கும் கேரக்டர்களிலோ, படங்களிலோ நடிக்க மாட்டேன். இதற்கு முன்பு அப்படி நடித்தற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். என்று டுவிட்டரில் அறிவித்துள்ளார். பிருத்விராஜின் இந்த அறிவிப்பு மலையாள நடிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இனி அவர்களும் அடுத்தடுத்து இதுபோன்று அறிவிக்கலாம் என்று தெரிகிறது.