ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் | தன் படங்களின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்குமார் |
'அஞ்சான்' படத்தின் மாபெரும் தோல்விக்குப் பிறகு ஒரு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் எழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி. கடும் நெருக்கடியில் இருந்த அவரை விஷால் 'சண்டக்கோழி 2' செய்யலாம் என கை கொடுத்து தூக்க முன்வந்தார். அதற்குள், தெலுங்கு ஹீரோக்களுக்கு லிங்குசாமி கதை சொல்லப் போனதால் லிங்குசாமியுடன் இணையும் திட்டத்தைக் கைவிட்டார். ஆனால், தெலுங்கு ஹீரோக்கள் லிங்குசாமியைக் கைவிட்டதால் மீண்டும் விஷால் பக்கமே வந்தார். சில பல பேச்சுக்களுக்குப் பிறகு 'சண்டக்கோழி 2' படத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்தனர்.
அதற்குள், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்க வரும் படத்தை லிங்குசாமி இயக்கப் போவதாக அறிவித்தார்கள். ஆனால், அல்லு அர்ஜுன் அடுத்து வேறு ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்ததால் லிங்குசாமியுடன் தமிழுக்கு வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை தற்போது லிங்குசாமியே தெளிவுபடுத்தியுள்ளார்.
'சண்டக்கோழி 2' படம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. அந்தப் படம் முடிந்ததும் உடனடியாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் என தெரிவித்துள்ளார். திரும்ப எந்த சர்ச்சையும் வராமல் பார்த்துக் கொள்வாரா ?.