ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மலையாள நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் சித்தரவதைகளுக்கு ஆளானதை கண்டித்து மலையாள திரையுலகமே ஒன்று திரண்டு கூட்டம் நடத்தி தங்களது கண்டனங்களை தெரிவித்தது. அதில் பேசிய அனைவரும் நடிகைகளின் பாதுகாப்பை இன்னும் உறுதி செய்யவேண்டும் என்கிற விதமாக பேசினார்.. ஒரு சிலர், நடிகைகள் தனியாக டாக்சியில் செல்லாமல் தக்க துணையுடன் செல்லவேண்டும் என அறிவுறுத்தி பேசினார்கள்.. இந்த கொடூர செயலில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதை ஒருமித்த கருத்தாக வெளிபடுத்தினார்கள்...
ஆனால் இந்த கண்டனக்கூட்டம் பற்றி லவ் 24x7 என்கிற படத்தை இயக்கிய ஸ்ரீபாலா மேனன் என்பவர் வேறு கோணத்தில் தனது கருத்தை கிண்டலாக கூறியுள்ளார். அதாவது பெண்கள் அப்படியிருக்க வேண்டும், பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று சொன்னீர்கள்.. ஆனால் ஆண்கள் தங்களது நடத்தையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதை ஒருவர் கூட வலியுறுத்த மாட்டீர்கள்.. அப்படித்தானே..?” என கொஞ்சம் கோபமாகவே கேட்டுள்ளார்.. தற்போது தமிழில் பிரபலமாக நடித்துவரும் நிகிலா விமலை இவர்தான் கதாநாயகியாக அறிமுகப்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.