'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விக்கி டோனர், மெட்ராஸ் கபே, பிக்கு, பிங்க் உள்ளிட்ட படங்களை இயக்கிய சுஜித் சிகார், அடுத்தப்படியாக ஒரு படத்தை இயக்க உள்ளார். இதில் வருண் தவானை நடிக்க வைக்க எண்ணியுள்ளார் இயக்குநர். ‛பட்லாபூர்' படத்தில் வருணின் நடிப்பை பார்த்த இயக்குநர், அவருக்கு ஏற்றபடியே ஒரு கதையை தயார் செய்து வைத்திருக்கிறாராம். வருணுக்கும் அந்த கதை பிடித்துவிட்டதாம். தற்போது வருண் தவான், ஜூட்வா-2 படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்ததும் சுஜித் சிகார் படத்தில் நடிக்க உள்ளாராம். வருண் நடிப்பில் அடுத்தப்படியாக பத்ரிநாத் கி துல்கனியா படம், வருகிற மார்ச் 10-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.