டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஒரு படம் வெற்றியடைந்தால் அந்த வெற்றியை அறுவடை செய்யும்வகையில் அப்படத்தின் இரண்டாம்பாகத்தை எடுப்பது கடந்த சில வருடங்களாக வழக்கத்தில் உள்ளது. இந்த விஷயத்தில் அதாவது இரண்டாம் பாகம் நடிப்பதில் தனுஷ் ஆர்வத்துடன் இருக்கிறார். விஐபி என்கிற வேலையில்லா பட்டதாரி படம் வெற்றியடைந்ததால் தற்போது சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் விஐபி- 2 படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தை முடித்த பிறகு பாலாஜி மோகன் இயக்கத்தில் மாரி-2 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை அடுத்து ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் தனுஷ். தனுஷின் 'வுண்டர்பார் ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரித்த 'எதிர்நீச்சல்', 'காக்கிச் சட்டை' ஆகிய படங்களை இயக்கிய ஆர்.எஸ். துரை செந்தில்குமார் தனுஷை வைத்து கொடி படத்தை இயக்கினார்.
வெற்றிமாறனின் 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' தயாரிக்க, மதனின் 'எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ்' நிறுவனம் 'கொடி' படத்தை வெளியிட்டது. இந்த படத்தில் தனுஷ் இரண்டு மாறுபட்ட வேடங்களில் நடித்திருந்தார். 'கொடி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து துரை செந்தில்குமார் இயக்கும் அடுத்த படத்திலும் தனுஷ் நடிக்கவிருக்கிறார். தற்போது இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலைகளில் ஆர்.எஸ். துரை செந்தில்குமார் ஈடுபட்டுள்ளார். தனுஷும், துரை செந்தில்குமாரும் இணைந்து பணியாற்றும் நான்காவது படமான இந்த படம் 'கொடி' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாக இருக்கிறது.