'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சிபிராஜ் நடிப்பில் அடுத்து வெளியாகவுள்ள படம் 'கட்டப்பாவை காணோம்'. இந்த படம் மார்ச் மாதம் 10 ஆம் தேதி அன்று வெளியாகும் என்று சொல்லப்படுகிறது. இந்நிலையில் கட்டப்பாவை காணோம் படத்துக்கு எதிர்பாராத சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. இந்தப் படத்தை ஸ்ரீ கிரீன் புரடக்ஷனஸ் நிறுவனம் வாங்கி தமிழகம் முழுக்க வெளியிட உள்ளது.
இந்த நிறுவனம்தான் விஜய் நடித்த பைரவா படத்தை வாங்கி தமிழகத்தில் வெளியிட்டது. விஜயா புரடக்ஷன்ஸ் நிறுவனத்திடமிருந்து குறிப்பிட்ட தொகைக்கு வாங்கிய ஸ்ரீ கிரீன் புரடக்ஷனஸ், பல மடங்கு லாபம் வைத்து ஏரியா வாரியாக பிரித்து பல விநியோகஸ்தர்களிடம் படத்தை விற்றது. பெரிய விலைக்கு விற்கப்பட்டதால் பைரவா படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை.
நான்கு நாளில் படம் ரூ.100 கோடி வசூலித்தது என்று படக்குழு தரப்பில் சொல்லப்பட்டாலும் தமிழகத்தில் அடுத்து நிகழ்ந்த பரபரப்பால் தியேட்டர்களில் கூட்டமில்லை. இதனால் பைரவா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பலருக்கும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் அந்த நஷ்டத்தை ஸ்ரீ கிரீன் புரடக்ஷனஸ் நிறுவனத்திடம் கேட்டு வருகிறார்களாம். இதன்காரணமாக ‛கட்டப்பாவை காணோம்' படத்தை வெளியிடுவதில் சிக்கல் உருவாகியிருக்கிறது கூறப்படுகிறது.