'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் எனப்படும் பெப்சிக்கு புதிய நிர்வாகிகள் தேர்வாகியுள்ளனர். தலைவராக ஆர்கே செல்வமணியும், பொதுச்செயலாளராக அங்கமுத்துவும், பொருளாளராக சுவாமிநாதனும், துணை தலைவர்களாக சோபி, எஸ்.ஆர்.சந்திரன், ஸ்ரீதர், பிரியா உள்ளிட்ட நிர்வாகிகள் தேர்வாகியுள்ளனர். இவர்கள் அனைவரும் நேற்று பொறுப்பேற்று கொண்டனர். இதில் தயாரிப்பாளர்கள் சங்கம், நடிகர்கள் சங்கம், பிலிம்சேம்பர் உள்ளிட் பல திரையுலக சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய பிலிம்சேம்பர் செயலலாளர் காட்ரகட்டா பிரசாத்... ‛‛மும்பையில் இருந்து நடிக்க வரும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் அவருடன் உதவியாளர்களையும் அழைத்து வருகிறார்கள். இவர்களுக்கான விமான டிக்கெட், தங்குமிடம், உணவு உள்ளிட்ட செலவுகள் தயாரிப்பாளரின் கையை கடிக்கிறது. எனவே பெப்சி நிர்ணயம் செய் தொகையை அவர்கள் பெற்று கொள்ள வழிவகை செய்ய வேண்டும். அல்லது நம்மிடம் உள்ள தொழிலாளர்களையே பயன்படுத்த புதிய பெப்சி நிர்வாகிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இதைப்போன்று தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் சங்கம் உள்ளிட்ட நிர்வாகிகளும் தங்கள் தரப்பில் உள்ள பிரச்னைகளை முன் வைத்தார்கள். இவர்கள் அனைவருக்கும் ஆர்கே செல்வமணி தலைமையிலான புதிய நிர்வாகிகள் விரைவில் நல்ல முடிவு எடுப்பார்கள் என தெரிகிறது. குறிப்பாக வெளிமாநில நடிகர்களை தமிழ்படங்களில் நடிக்க வைப்பது, அவர்களுக்கான செலவு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என தெரிகிறது.