தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி | வைப் குமாரில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் | அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து |
கௌதமிபுத்ர சடர்கனி எனும் சரித்திர திரைப்படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் பாலகிருஷ்ணா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது. பாலகிருஷ்ணாவிடம் கே.எஸ்.ரவிக்குமார் கூறிய கதை பிடித்துப்போனதால் உடனடியாக படத்தின் வேலைகளை துவங்கச்சொல்லி விட்டாராம் பாலகிருஷ்ணா. தெலுங்கு திரை உலகிற்கு ஏற்ற பக்கா கமர்ஷியல் படமாக உருவாகவிருக்கும் இப்படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளாராம். மேலும் இப்படத்தில் பாலகிருஷ்ணாவுடன் மூன்று நாயகிகள் நடிக்கவிருப்பதாகவும் அவர்களுக்கான தேடலில் கே.எஸ்.ரவிக்குமார் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன. நடிகை தமன்னா மற்றும் பிரக்யா ஜெய்ஸ்வாலிடம் இப்படத்தில் நாயகியாக நடிக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாக டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் இப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாகவும், அதற்கு முன்னதாகவே ப்ரீபுரொடக்ஷன் வேலைகளை கே.எஸ்.ரவிக்குமார் துவங்கிவிட்டதாகவும் கூறப்படுகின்றது.