ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ்த் திரையுலகத்தில் கடந்த சில நாட்களாகவே 7 ஹீரோக்களுக்கு வினியோகஸ்தர்கள் 'ரெட் கார்டு' போட்டு விட்டதாகவும், அந்த 7 ஹீரோக்களின் படங்களை இனிமேல் வாங்க மாட்டார்கள் என்றும் 'வாட்ஸ் ஆப்' மூலமாக தகவல் வேகமாகப் பரவியது.
ரஜினிகாந்த் நடித்த கபாலி, விஜய் நடித்த பைரவா, சூர்யா நடித்த சி 3, கார்த்தி நடித்த காஷ்மோரா, விஷால் நடித்த கத்திச் சண்டை, தனுஷ் நடித்த கொடி, தொடரி, சிவகார்த்திகேயன் நடித்த 'ரெமோ' ஆகிய படங்கள் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களுக்கு நஷ்டத்தைக் கொடுத்ததால் மேலே குறிப்பிடப்பட்ட ஹீரோக்களின் படங்களை வினியோகஸ்தர்கள் வாங்கத் தடை விதித்துவிட்டார்கள் என்று தகவல் பரவியது.
இதையடுத்து பிரபல வினியோகஸ்தரான திருப்பூர் சுப்பிரமணியம் வாட்ஸ் ஆப் மூலம் பேசிய ஒரு ஆடியோ செய்தி தற்போது வேகமாகப் பரவி வருகிறது. அதில் மேலே சொன்ன நடிகர்களின் படங்கள் நஷ்டத்தை ஏற்படுத்திய படங்கள் என்றும். 'ரெமோ' படம் மட்டுமே கோவை, செங்கல்பட்டு ஏரியாக்களில் கொஞ்சம் லாபத்தைக் கொடுத்தது என்றும் கூறியுள்ளார். அதோடு படம் வெளியான மறுநாளே படம் வெற்றி என ஐந்து நட்சத்திர ஓட்டலில் வெற்றி விழா கொண்டாடுவதையும், அசத்தல் வெற்றி, ஆர்பாட்ட வெற்றி, இமாலய வெற்றி என ஓடாத படங்களைப் பற்றி விளம்பரப்படுத்திக் கொள்வதையும் அவர் கடுமையாகக் கிண்டலடித்துள்ளார்.
ஒரு படம் வெளியானால் சம்பந்தப்பட்ட வினியோகஸ்தர்களை அழைத்து உண்மை நிலவரம் என்ன என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்றபடி செயல்படுங்கள் என்றும் கூறியுள்ளார்.
அந்தக் காலத்தில் எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்டோர் வினியோகஸ்தர்களுக்கு அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தார்கள். ஆனால், இன்று யாரும் அப்படிக் கொடுப்பதில்லை. அப்படி விநியோகஸ்தர்களுக்கும் லாபம் கிடைத்ததை என பார்த்ததால் தான் இந்த திரைத்துறை 50 ஆண்டுகளாக உயிருடன் இருந்தது. இந்த கடைசி 10 ஆண்டுகள் திரைத்துறை மரணப்படுக்கைக்கு போகும் நிலைக்கு காரணம் இந்த நடிகர்கள் தான்.
வினியோகஸ்தர்கள் தரப்பிலிருந்து யாருக்கும் 'ரெட் கார்டு' எனப்படும் தடை போடப்படவில்லை என்றும், அப்படியெல்லாம் நாங்கள் செயல்பட மாட்டோம் என்றும் அவர் தெளிவுபடுத்தியிருக்கிறார்.
7 ஹீரோக்களின் படங்களின் நஷ்ட ஈடு விவகாரம் திரையுலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் சுப்பிரமணியத்தின் கருத்தால் பொய்யான வெற்றி, வசூலைப் பற்றித் தகவல் வெளியிடுபவர்களுக்கு கடும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.