விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் | ஓட்டுரிமையை வீணாக்காதீர்கள் : விஜய் ஆண்டனி | மீண்டும் படமான கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் : ராஷி கண்ணா நடித்துள்ளார் | பல வருடங்களுக்கு பிறகு கதை நாயகனாக நடிக்கும் ராதாரவி |
டோலிவுட்டின் முன்னணி நடிகையான ராகுல் ப்ரீத்தி சிங் ராம் சரணுடன் துருவா படத்திற்கு பின்னர் மகேஷ் பாபுவுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருகின்றார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு சம்பவாமி யுஹே யுஹே என பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது. சாய் தரண் தேஜுடன் இணைந்து ராகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ள வின்னர் திரைப்படம் பிப்ரவரி 24ல் திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராகுல் ப்ரீத்தி சிங்கிடம் மகேஷ் பாபுவுடன் நடிப்பது குறித்து கேட்க்கப்பட்டது. இதற்கு பதிலளித்த ராகுல் ப்ரீத்தி சிங், மகேஷ் பாபு எளிமையானவர், நேரம் தவறாதவர். படப்பிடிப்பு தளத்திற்கு குறித்த நேரத்திற்கு வருவது அவரது சிறப்புகளில் ஒன்று. மகேஷ் பாபுவுடன் இணைந்து பணியாற்றுவது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக ராகுல் ப்ரீத்தி சிங் பதிலளித்துள்ளார். மேலும் இப்படத்தில் மகேஷ் பாபு புதுவித கெட்டப்பில் நடித்துள்ளதாகவும் ராகுல் ப்ரீத்தி சிங் தெரிவித்தார்.