தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகை பாவனா கடந்த சில தினங்களுக்கு முன்பு அவரது டிரைவர்களால் கடத்தப்பட்டு பாலியல் கொடூரத்துக்கு உட்படுத்தப்பட்டார். இந்த வழக்கு தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக மலையாள முன்னணி நடிகர் திலீப்பிடம் போலீசார் விசாரித்து வருவதாக நேற்று கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் திலீப் நடிகை மஞ்சுவாரியரை திருமணம் செய்து கொண்டு 14 ஆண்டுகள் வாழ்ந்தார். அவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் தனது வெளிநாட்டு கணவரை விவாகரத்து செய்து விட்டு மீண்டும் நடிக்க வந்தார் காவ்யா மாதவன். திலீப், காவ்யா மாதவன் ஜோடி கேரளாவில் ரொம்பவே பாப்புலர். இருவரும் இணைந்து நடித்த படங்கள் வெற்றி பெறும். அதன்படி மீண்டும் நடிக்க வந்த காவ்யா மாதவன் திலீபுடன் மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.
காலப்போக்கில் திலீப், காவ்யாக மாதவன் நட்பு நெருக்கமானது. இதை தனது தோழியான மஞ்சு வாரியரிடம் பாவனா தெரிவித்திருக்கிறார். எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார். இதனால்தான் மஞ்சு வாரியார் திலீபை கண்டித்துள்ளார். அதன் பிறகு கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் விவாகரத்து செய்தனர். பாவனா எச்சரித்தபடியே திலீபும், காவ்யா மாதவனும் திருமம்ண செய்து கொண்டனர்.
இத்தனைக்கும் காரணமான பாவனா மீது திலீப்புக்கு கோபம் இருந்துள்ளது. பாவனாவுக்கு கிடைக்க வேண்டிய சில சினிமா வாய்ப்புகளை திலீப் தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது. இதனை பாவனாவே வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார். பாவனா மீது தொடர்ந்து திலீப் கோபத்தில் இருந்து வந்தாக கூறப்படுகிறது.
"இந்த சம்பவத்தின் அடிப்படையில் பாவனா கடத்தலில் திலீப்புக்கு தொடர்பு இருக்குமோ என்று கேரள போலீசுக்கு சந்தேகம் இருந்து உண்மை. ஆனால் அது தொடர்பாக எந்த விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை" என்று கேரள போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தது. இதற்கிடையில் பாவனா கடத்தப்பட்டது தொடர்பாக நடந்த மலையாள நடிகர் சங்கத்தின் ஆலோசனை கூட்டத்தில் திலீப் கலந்து கொண்டு "பாவானாவுக்கு நடந்த கொடூரத்துக்கு தீர்வு காண்பதற்கு நடிகர் சங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு துணை நிற்பேன்" என்று பேசியது குறிப்பிடத்தக்கது. இந்த கூட்டத்தில் மஞ்சு வாரியரும் கலந்து கொண்டர்.