'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
சின்னத்திரை தொகுப்பாளினி ரம்யா, இப்போது ரேடியோ ஜாக்கி, சினிமா நடிகை என பல அவதாரங்களை எடுத்துள்ளார். ரம்யாவின் இன்னொரு முகம் பளு தூக்கும் வீராங்கணை. சமீபகாலமாகத்தான் இந்த துறைக்குள் நுழைத்து அடுத்தடுத்து வெற்றிகளை குவித்து வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்த மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் தேசிய வீராங்கணையாகியிருக்கிறார். அடுத்து கோல்கட்டாவில் நடக்க இருக்கும் தேசிய பளு தூக்கும் போட்டியில் தமிழ் மாநில அணியின் சார்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இதுகுறித்து ரம்யா கூறியதாவது: பல முன்னணி வீரர்கள் பங்கேற்ற இந்த பளு தூக்கும் போட்டியில் கலந்து கொள்வது என்பது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. அத்தகைய வீரர்களோடு போட்டியில் கலந்து கொள்வது மூலம், நம்முடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். 27.5 கிலோ பளு தூக்கும் பிரிவில் ஆரம்பித்து, 32.5 கிலோ பிரிவிற்கு முன்னேறி தற்போது 35 கிலோ பிரிவில் நான் பங்கேற்று இருக்கிறேன். போட்டி சற்று கடினமாக இருந்தாலும், என்னுடைய விடா முயற்சியால் தற்போது இந்த மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருக்கிறேன். இதன் மூலம் நான் தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொள்ள தேர்ச்சி பெற்று இருக்கிறேன். என்னுடைய நாட்டிற்காக விளையாடுவதற்காக, நான் கடினமான பயிற்சியில் ஈடுபட இருக்கிறேன் என்கிறார் ரம்யா.