Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: சொத்துக்களை உறவினர்களுக்கு பிரித்து கொடுத்த பிரதாப் போத்தன்

22 பிப், 2017 - 10:55 IST
எழுத்தின் அளவு:
Prathab-pothan-gave-his-property-to-family-members

தமிழ் சினிமாவில் வித்தியாசமான ஆளுமை பிரதாப் போத்தன். படங்களில் சற்று சைக்கோத்தனமாக கேரக்டரில் நடித்திருப்பதால் நிஜத்திலும் அவர் அப்படித்தான் போலும் என்று பலர் நினைக்கிறார்கள். அதற்கு காரணம் உண்டு. யாரிடமும் அதிகம் பேச மாட்டார். பொது நிகழ்ச்சிகளுக்கு வரமாட்டார். சொந்தக்காரர்கள், நண்பர்கள் திருமணம் என்றால்கூட எல்லோருக்கும் முன்னதாக வந்து வாழ்த்தி விட்டு போய்விடுவார், அல்லது கடைசியாக வந்து வாழ்த்துவார். படப்பிடிப்பு தளங்களில் தனியாக அமர்ந்திருப்பார். இது அவரது பழக்கம். கூட்டம் என்றால் அலர்ஜி. தனிமை மிகவும் பிடிக்கும்.


பிரதாப் போத்தனின் அண்ணன் ஹரிபோத்தன் மலையாளத்தில் பெரிய இயக்குனர் 48 படங்கள் இயக்கியவர். அண்ணன் மாதிரி இயக்குனராக வேண்டும் என்ற சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் படித்தபோது நாடகம் போட்டார். அந்த நாடகத்தை பார்த்துவிட்டுதான் இயக்குனர் பரதன் அவரை ஆரவம் என்ற படத்தில் அறிமுகப்படுத்தினார். ஆனால் அந்தப் படம் தோல்வி அடைந்தது. அடுத்து அதே பரதன் இயக்கத்தில் பிரதாப் போத்தன் நடித்த தகரா பெரும் பெற்றி பெற்றது. அந்த படத்தை பார்த்துதான் பாலுமகேந்திரா அழியாத கோலங்கள் படத்தில் நடிக்க வைத்தார். அதன் பிறகு இயக்குனராகவும், நடிகராகவும் இப்போது வரைக்கும் தொடர்கிறார்.


பிரதாப் போத்தன் குடும்பத்திற்கு கேரளாவில் ஏராளமான சொத்துக்கள் இருந்தன. இந்த சொத்துக்கள் மீது பல வருடங்களாக வழக்கு நடந்தது. இறுதியில் வழக்கு பிரதாப் போத்தன் சகோதரர்களுக்கு சாதமாக தீர்ப்பானது. அண்ணன் ஹரிபோத்தன் அப்போது உயிரோடு இல்லாததால் அத்தனை சொத்துக்களும் பிரதாப் போத்தனுக்கு வந்தது. திடீரென இத்தனை சொத்துகளையும், பணத்தையும் வைத்துக் கொண்டு என்ற செய்வது என்ற தவித்தார் பிரதாப் போத்தன்.


தன் உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைத்தார். அப்படி அழைத்த உறவினர்களில் சொத்துக்காக வழக்கு போட்டவர்களும் இருந்தார்கள். தனக்கென சிறிய அளவில் உள்ள சொத்துக்களை எடுத்துக் கொண்டு மீதியை உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் பிரித்துக் கொடுத்து விட்டார். இதுதான் நிஜமான பிரதாப் போத்தன். நம் மனதில் இருப்பது அவரைப் பற்றிய சினிமா பிம்பம்தான்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in