கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
ஞானராஜசேகரன் இயக்கிய மோகமுள் படத்தில் 8 வயது சிறுவனாக நடித்தவர் துரைமணி. அதையடுத்து பல சீரியல்களில் வில்லனாக நடித்து வந்த அவர் தற் போது வானவில் டிவியில் செலிபிரிட்டி ஷோவில் தொகுப்பாளராகியிருக்கிறார்.
இதுபற்றி துரை மணி கூறும்போது:மோகமுள் படத்தில் நடித்த பிறகு நான் படித்து வந்த பள்ளியில் என்னை அனைவருமே நடிகர் என்றுதான் அழைப்பார்கள். அதன்காரணமாக நடிப்பின் மீதான ஆர்வம் அதிகரித்தது. ஆனால் பின் னர் சினிமாவில் எதிர்பார்த்தபடி வாய்ப்புகள் அமையாததால் போலீசாக ஆசைப்பட்டேன். ஆனால் மூன்று முறை முயற்சி எடுத்தும் செஸ்ட் இல்லை என்று அனுப்பி விட்டனர். அதனால் பின்னர் சீரியல்களில் நடித்தேன். சிவரகசியம், ஆதிரா, தெய்வமகள் என நடித்தேன். பல சீரியல்களில் வில்லனாக நடித் துள்ளேன்.
இப்போது வானவில் டிவியில் 6 மாதமாக செலிபிரிட்டி ஷோவில் ஆங்கராக உள்ளேன். நடிகனாக மட்டுமே இருந்த எனக்கு நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதும் ஒரு புதிய அனுபவத்தைக்கொடுத்து வருகிறது. அதேசமயம் தொடர்ந்து சினிமா, சின்னத்திரைகளில் நடிப்பதற்கான முயற்சிகளையும் எடுத்து வருகிறேன்.
அதனால் விரைவில் என்னை இதுவரை பார்த்ததை விட அதிரடியான வில்லன் வேடங்களில் பார்க்கலாம் என்று கூறும் நடிகர் துரைமணி, விஸ்காம் மாணவர்களுக்கு இலவசமாக வகுப்பு எடுத்து வருகிறேன். இப்படி யாருக்கேனும் என்னால் முடிந்த உதவிகள் செய்வது மனதளவில் திருப்தியை கொடுக்கிறது என்கிறார்.