பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மா.பா.கா ஆனந்த், நிகிலா விமல், செண்ட்ராயன் நடித்துள்ள படம் பஞ்சுமிட்டாய். இயக்குனர் அமீரின் உதவியாளர் எஸ்.பி.மோகன் இயக்கி உள்ளார். டி.இமான் இசை அமைத்துள்ளார். மகேஷ் கே.தேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ட்ரீம் சினிமா சார்பில் எஸ்.கணேஷ், எம்.எஸ்.வினோத்குமார் தயாரித்துள்ளனர். இது தமிழில் தயாராகும் முதல் மாய யதார்த்த கதை. இதுபற்றி இயக்குனர் எஸ்.பி.மோகன் கூறியதாவது:
முதன் முறையாக மாய யதார்த யுக்தியை கையாண்டு நடக்க முடியாத நிகழ்வுகளை யதார்த்தமாக சொல்கிற படம். இது புரிந்து கொள்வதற்க சிரமாக இருக்கும் படம் பார்க்கும்போது புரியும். ஹீரோ தன் கண்முன்னால் நடக்கும் நிகழ்வுகளை பிரமாண்ட படுத்தி பார்க்கிறவன். அந்த காட்சிகள் விசுவலாக விரியும்போது பிரமிப்பாக இருக்கும். பஞ்சுமிட்டாய் வாயில் போட்டவுடன் கரைந்து இனிப்பு சுவையயை கொடுப்பது போல இந்தப் படமும் பார்த்தவுடன் மக்களை சந்தோஷப்படுத்தும். ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தவும், சென்டிமெண்டுக்காகவும் கழுதை பயன்படுத்தப்பட்டுள்ளது. படத்திற்கு தணிக்கை குழு யூ கொடுத்துள்ளது. தமிழக அரசு வரிவிலக்கு கொடுத்துள்ளது. இது எல்லோரும் பார்க்கத் தகுந்த தரமான படமாக இருக்கும். என்கிறார் இயக்குனர் எஸ்.பி.மோகன்.