தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
கோவிந்தா மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக நடிகர் வருண் தவான் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன்னர் நடிகர் வருண் தவான், கோவிந்தாவை போன்று இருப்பதாகவும், அவரை மாதிரியே சினிமாவில் நடப்பதாக செய்திகள் வந்தன. இதைப்பற்றி கேள்விப்பட்ட கோவிந்தா, வருண் மற்றும் அவரது தந்தை டேவிட்டை மறைமுகமாக சாடி பேசினார். இந்நிலையில் வருண் அளித்த பேட்டி ஒன்றில் இதுப்பற்றி விளக்கம் அளித்துள்ளார்.
அதில் வருண் கூறியிருப்பதாவது... ‛‛கோவிந்தாவுக்கும், என் அப்பாவுக்கும் இடையே சில பிரச்னைகள் இருக்கலாம். ஆனால் இதில் என்னை உள் இழுக்க கூடாது. இருவரும் தனியாக அமர்ந்து தங்களுக்கு இடையேயான மனக்கசப்பை தீர்த்து கொள்ளலாம், இதில் நான் தலையிட முடியாது, ஏனென்றால் இது இரு நண்பர்களுக்கு இடையே நடக்கும் பிரச்னையாகும். இன்னொரு விஷயம் பொதுவாக படங்களில் பணியாற்றும் போதும் இருவருக்கும் இடையே சில மனஸ்தாபங்கள் ஏற்படலாம். அதுபோன்று தான் என் தந்தைக்கும், கோவிந்தாவுக்கும் இடையேயான பிரச்னையும். நாங்கள் பலமுறை கோவிந்தாவை சந்தித்து இருக்கிறோம். அவர் மீது நான் மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன், அது என்றும் தொடரும்'' என்று கூறியுள்ளார்.
தற்போது வருண் தவான், ‛பத்ரிநாத் கி துல்கனியா' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படம், வருகிற மார்ச் 10-ம் தேதி ரிலீஸாக உள்ளது.