பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் | தேர்தல் விதி மீறல் : விஜய் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் | ஷில்பா செட்டி மற்றும் ராஜ் குந்த்ராவின் 97 கோடி சொத்துக்கள் முடக்கம்! |
ராமானுஜர் தொடரில் ராமானுஜரின் மனைவியாக நடித்தவர் நட்சத்திரா. அந்த ஒரே சீரியலில் பெரிய அளவில் பேசப்பட்ட அவர், அதையடுத்து தெய்வம் தந்த வீடு தொடரில் நடித்து வருகிறார். முதல் தொடரில் சரித்திர வேடத்தில் நடித்தவர், இப்போது யதார்த்தமான ரோலில் நடித்துக்கொண்டிருக்கிறார். தினமலர் இணையதளத்திற்காக நட்சத்திரா அளித்த பேட்டி...
ராமானுஜர் தொடரில் நடிக்க கமிட்டானபோது எனக்கு தமிழ் சுத்தமாக பேசத் தெரியாது. தெலுங்கு பெண் என்பதால் மொழி தெரியாமல் ரொம்பவே கஷ்டப்பட்டேன். ஆனால், அந்த தொடரில் டைரக்டர் தனுஷ் எனக்கு புரியும்படி சொல்லிக்கொடுத்து நடிக்க வைத்தார். அதனால்தான் என்னால் அந்த தொடரில் நடிக்க முடிந்தது. மேலும், ராமானுஜரின் மனைவியாக சரித்திர காலத்து கெட்டப்புக்கு முழுமையாக மாறினேன். தினமும் காஷ்டியூம், மேக்கப்போடுவதற்கே இரண்டு மணி நேரம் செலவு செய்தார்கள்.
தமிழே தெரியாமல் எப்படி தமிழ் சீரியலில் நடிக்க வந்தீர்கள்?
மொழி தெரியாது என்பதால் நான் முதலில் சினிமாவில் நடிக்கத்தான் முயற்சி எடுத்தேன். ஆனால் சரியான படங்கள் செட்டாகவில்லை. அதன்பிறகுதான் சீரியலுக்கு வந்தேன். ராமானுஜர் சீரியலில்கூட நான் லீடு ரோலில் நடிக்க முயற்சிக்கவில்லை. ஒரு சிறிய கேரக்டரில் நடிக்கத்தான் சான்ஸ் கேட்டேன். ஆனால் ஆடிசனில் கலந்து கொண்டபோது எனது தோற்றமும், நடிப்பும் ராமானுஜர் மனைவி வேடத்துக்கு பொருத்தமாக இருப்பதாக சொல்லி என்னை அந்த வேடத்துக்கு ஓகே செய்தார் டைரக்டர். இந்த சீரியலில் நடித்தபோதுதான் சுத்தமான தமிழை பேசக்கற்றேன். முக்கியமாக சில தமிழ் வார்த்தைகள் தமிழ் மக்களுக்கே புரியாமல் இருக்க, நான் புரிந்து கொண்டேன். இந்த சீரியலில் நான் தமிழ் மட்டுமின்றி நடிப்பையும் நன்றாக கற்றுக்கொண்டேன்.
இந்த வேடத்துக்கு நேயர்கள் மத்தியில் ரொம்ப நல்ல பெயர் கிடைத்தது. ராமானுஜருடைய மனைவி வேடம் என்றதும் கடவுள் மாதிரி என்னை பார்க்கிறார்கள். இந்தமாதிரி வேடம் பண்ண கொடுத்து வைத்திருக்கனும். அதிர்ஷ்டம் செய்திருக்கிறீர்கள் என்றெல்லாம் சொல்கிறார்கள். நான் அவர்கள் இப்படி பாராட்டும் அளவுக்கு நடிச்சிருப்பேனா என்று தெரியவில்லை. ஆனால் கடுமையாக புகழ்கிறார்கள். அதனால் இந்த சீரியலில் நடித்ததை காலத்துக்கும் நான் பெருமையாக சொல்லிக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
மேலும், எனக்கு ராமானுஜர் மனைவி பற்றி எதுவுமே தெரியாது. அவள் ராமானுஜரின் குருவை அவமானப்படுத்துவது, வீட்டுக்கு வந்தவர்களிடம் சண்டை போடுவது என 3 பெரிய தவறுகள் செய்வாள். அதன்பிறகுதான் அவர் சன்னியாசம் சென்று விடுவார் என்று இயக்குனர் சொன்ன பிறகுதான் தெரிந்து கொண் டேன். பின்னர் அதை உணர்ந்து அந்த கதாபாத்திரமாக மாறி நடித்தேன். ஒருகட்டத்தில், ராமானுஜர் சீரியல் முற்று பெற்றபோது அழுதே விட்டேன். இன்னும் கொஞ்சம் நாள் இருக்கக்கூடாதா? என்று பீல் பண்ணினேன்.
தற்போது, தெய்வம் தந்த வீடு சீரியலில் நடிக்கிறேன். துறுதுறுவென்ற கேரக்டர். ரியல் லைப்பில் நான் எப்படி இருப்பேனோ அப்படியோ ஒரு வேடம் கிடைத் துள்ளது. அதனால், ராமானுஜர் சீரியல் போன்று மெனக்கெடல் இல்லாமல் இயல்பாகவே நடித்து வருகிறேன். இந்த கேரக்டருக்கும் நேயர்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது. சீரியல்கள் மூலம் சொசைட்டிக்கு நிறைய நல்ல விசயங்கள் சொல்லலாம். அதனால் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தும் வேடங்கள். சமூக சேவை மனப்பான்மையை வளர்ப்பது மற்றும் மாற்றுத்திறனாளி வேடங்களில் நடிக்க வேண்டும் என்பது போன்ற ஆசைகள் எனக்கு உள்ளது.
இப்படி சொல்லும் நட்சத்திராவுக்கு சினிமாவில் நடித்து புகழ்பெற வேண்டும் என்பதுதான் எதிர்கால ஆசையாம். குறிப்பாக, அருந்ததி, ருத்ரம்மா தேவி படங்களில் அனுஷ்கா நடித்தது போன்ற அதிரடியான சரித்திர படங்களில் நடிக்க வேண்டும் என்று கூறும் அவர், கமர்சியல் கதைகள் என்கிறபோது தமன்னா போன்று கிளாமர் ஹீரோயினாக நடிக்க ஆசைப்படுவதாகவும் சொல்கிறார்.