திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு | விஜய் சேதுபதிக்கு வில்லனாகும் நாசர் | கிரிக்கெட் பின்னணி கதையில் விஜய் மகன் | சிஎஸ்கே வீரருடன் சீரியல் நடிகைக்கு காதலா? - நடிகையே சொன்ன உண்மை | பணத்திற்காக அட்ஜெஸ்ட்மெண்ட்? - ஆர்த்திகா அளித்த அதிரடி பேட்டி | வில்லியாக என்ட்ரி கொடுக்கும் ஆர்த்தி சுபாஷ் | பிளாஷ்பேக் : முதல் அரசியல் நையாண்டி படம் | சீரியல் ஜோடி திருமணம் |
இந்தியத் திரையுலகின் 'பிக் பி' என அழைக்கப்படுபவர் அமிதாப் பச்சன். 70 வயதைக் கடந்தாலும் இன்றும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து இன்றைய இளம் ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்துள்ளவர். மற்ற நடிகர்களைப் போல் தனக்குத் தேவையான சமயத்தில் மட்டும் சமூக வலைத்தளங்களில் ஈடுபடாமல் கடந்த பல வருடங்களாகவே ஈடுபாட்டுடன் இருப்பவர். அவர் எழுதும் எழுத்துக்களுக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.
'பிளாக்'கில் எழுத ஆரம்பித்தவர் பின்னர் சமூக வலைத்தளமான டிவிட்டரிலும் தன்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்து வருகிறார். 2010ம் ஆண்டில் டிவிட்டரில் இணைந்தவர் 7 வருடங்களுக்குள்ளாகவே 25 மில்லியன் தொடர்பாளர்களைத் தொட்டுள்ளார். டிவிட்டரில் 25 மில்லியன், அதாவது இரண்டரை கோடி தொடர்பாளர்களைத் தொட்டுள்ள ஒரே இந்திய திரைப் பிரபலம் அமிதாப் மட்டுமே. டிவிட்டரில் 25 மில்லியனைத் தொட்டதற்கு அமிதாப் பச்சன் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அமிதாப்பிற்கு அடுத்து, ஷாரூக்கான் - 23.4, சல்மான் கான் - 21.5 ஆமீர்கான் - 19.9, தீபிகா படுகோனே - 17.4, பிரியங்கா சோப்ரா - 14.4 மில்லியன் தொடர்பாளர்களுடன் உள்ளனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் - 13.1, தனுஷ் - 4.2, ரஜினிகாந்த் - 3.59, சமந்தா - 3.43, சிவகார்த்திகேயன் - 2.74 மில்லியன் தொடர்பாளர்களுடன் உள்ளனர். ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடந்த போது த்ரிஷா, விஷால் ஆகியோர் டிவிட்டரை விட்டு விலகினர் என்பது குறிப்பிடத்தக்கது.