‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
கடந்தாண்டு மூன்று தொடர் ஹிட்டுகளை கொடுத்த அக்ஷ்ய் குமார், இந்தாண்டில் தனது முதல் ரிலீஸாக ‛ஜாலி எல்எல்பி-2' படத்துடன் களமிறங்குகிறார். வருகிற பிப்.10-ம் தேதி படம் ரிலீஸாக உள்ள நிலையில், ஜாலி எல்எல்பி-2 பற்றியும், அதில் நடித்த அனுபவம் பற்றியும் அக்ஷ்ய் நம்மிடம் பகிர்ந்து கொண்டதாவது...
* ஜாலி எல்எல்பி-2 பட டிரைலரை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள், உங்களுக்கு எப்படி இருக்கிறது.?
படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறேன். எதற்காக ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள் என்று தெரியவில்லை, ஆனால் படம் ஒரு ரியாலிஸ்ட்டிக் படமாக எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான விஷயங்களை படத்தில் சொல்லியிருக்கிறோம். இயக்குநர் சுபாஷ் கபூர், முன்னர் பத்திரிகையாளராக இருந்தவர், கோர்ட்டின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் என்று அவருக்கு தெரியும், அதனால் அவர் உண்மையை சமூகத்திற்கு சினிமா வாயிலாக எடுத்துரைப்பார்.
* கோர்ட்டில் நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளன, இதுப்பற்றி உங்கள் கருத்து என்ன.?
நிறைய வழக்குகள் நிலுவையில் உள்ளதை நானும் அறிவேன், ஆனால் என்னால் ஒன்றும் செய்ய முடியாது. இது நீதித்துறையில் உள்ள பெரிய பிரச்னை. இன்றைக்கு நாட்டில் 3.5 கோடி வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன, ஆனால் அவற்றை தீர்க்க 21 ஆயிரம் நீதிபதிகள் தான் உள்ளனர். இத்தனை வழக்குகளை இவர்களால் எப்படி தீர்க்க முடியும், அது சாத்தியமே இல்லை. சில வழக்குகள் நீடித்து கொண்டே போனால் ஒருவரின் வாழ்க்கை பாதிக்கத் தான் செய்யும். இதற்கு ஒரே தீர்வு நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும்.
* முன்பெல்லாம் ஆக்ஷ்ன் படத்தில் நடித்தீர்கள், அதன்பிறகு காமெடி படங்களில் நடித்தீர்கள், இப்போது வித்தியாசமான கதையில் நடிக்கிறீர்கள், உங்களின் மனநிலை எப்படி.?
என்னுடைய ஆரம்பகால சினிமா வாழ்க்கையில் அதிகப்படியான ஆக்ஷ்ன் படங்களிலேயே நடித்தேன். வேறுயாரும் வித்தியாசமான படங்களை தரவில்லை, அதனால் அந்தமாதிரி நடிக்க வேண்டிய சூழ்நிலை. அதன்பின்னர் இயக்குநர் பிரியதர்ஷனை சந்தித்தேன். அவர் தான் என்னை காமெடி படங்களில் நடிக்க அறிவுறுத்தினார், காமெடி எவ்வளவு கஷ்டம் என்பதை நான் அறிவேன், இருந்தாலும் கஷ்டப்பட்டு நடித்தேன். இயக்குநர்கள் ராஜ்குமார் சந்தோஷி, நீரஜ் வோரா உள்ளிட்ட பலர் தந்த ஊக்கத்தால் காமெடியிலும் ஜொலிக்க முடிந்தது. இப்போது வித்தியாசமான கதைகளில் நடிக்கிறேன், அது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது.
* ஜாலி எல்எல்பி - ஜாலி எல்எல்பி-2 வித்தியாசம் என்ன.?
இரண்டு படங்களுக்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. இயக்குநர் சுபாஷ் கபூர் மற்றும் ஜாலி கேரக்டரும் தான் ஒற்றுமை. ஜாலி எல்எல்பி படத்தில் டில்லியில் நடந்த ஒரு வழக்கை மையப்படுத்தி இருந்தது. ஜாலி எல்எல்பி-2, லக்னோ நகரத்தில் உள்ள பல்வேறு வழக்குகளை மையப்படுத்தி இருக்கும்.
* எதன் அடிப்படையில் படங்களை தேர்வு செய்கிறீர்கள்.?
படத்தில் ஒரு மெஸேஜ் சொல்ல வேண்டும் என்பதற்காக படங்கள் பண்ணவில்லை. என்னுடைய படங்கள் கமர்ஷியல் ரீதியாக இருக்க வேண்டும், அதேசமயம் ரசிகர்களுக்கு ஏதாவது சொல்ல வேண்டும் என்று தான் நினைப்பேன். தற்போது, வருடத்திற்கு மூன்று - நான்கு படங்களில் நடிக்கிறேன். கதை பிடித்திருந்தால் நடிப்பேன், அவ்வளவு தான்.