‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
பாகுபலி இரண்டாம் பாகத்தை முடித்துக் கொடுத்து விட்டு அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என செய்திகள் வட்டமடிக்கும் நேரத்தில் அவர் சிரஞ்சீவியின் 151வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக டோலிவுட்டில் செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி அரசியலுக்கு சென்றதால் 9 ஆண்டுகளாக சினிமாவில் நடிக்கவில்லை. இப்போது அரசியலை கைவிட்டு மீண்டும் சினிமாவுக்கு வந்திருக்கிறார். அவரது 150 படமான கைதி நம்பர் 150 மாபெரும் வெற்றி பெற்று 100 கோடி கிளப்பில் சேர்ந்திருக்கிறது. இந்த வெற்றியை அனுபவித்து வரும் சிரஞ்சீவி தனது 151வது படத்திற்கும் தயாராகிவிட்டார். சூப்பரான ஒரு கதை தயார் செய்யுமாறு தெலுங்கு இயக்குனர் சூரியிடம் தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்தையும் அவரது மகன் ராம்சரண் தான் தயாரிக்க இருக்கிறார்.
இதில் சிரஞ்சீவி ஜோடியாக அனுஷ்கா நடிக்க இருக்கிறார். கைதி நம்பர் 150 படத்தில் அனுஷ்கா தான் நடிக்க வேண்டியது. ஆனால் அப்போது அவர் பாகுபலி இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருந்ததால் நடிக்க முடியவில்லை. அதன் பிறகுதான் நயன்தாரா பேசப்பட்டு கடைசியாக காஜல் அகர்வால் நடித்தார். அதனால் 151வது படத்தில் அனுஷ்கா தான் ஹீரோயின் என்பதில் உறுதியாக இருக்கிறார் சிரஞ்சீவி.