வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாஜிராவ் மஸ்தானி படத்திற்கு பிறகு இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலி, பத்மாவதி எனும் வரலாற்று படத்தை இயக்கி வருகிறார். ரன்வீர் சிங், ஷாகித் கபூர், தீபிகா படுகோனே முக்கிய ரோலில் நடிக்கின்றனர். இதன்படப்பிடிப்பு ஜெய்ப்பூர் அருகே நடந்து வந்தது. இரு தினங்களுக்கு முன்னர் கர்னி ராஜ்புட் என்ற அமைப்பு, பத்மாவதி படத்தில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் இருப்பதாக கூறி படப்பிடிப்பு தளத்திற்குள் புகுந்து அங்கிருந்த செட்டுகளை நாசம் செய்ததுடன், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியையும் கடுமையாக தாக்கியது. இதற்கு திரையுலகினர், அரசியல் கட்சியினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் ஜெய்ப்பூரில் கிளம்பிய எதிர்ப்பை அடுத்து, பத்மாவதி படக்குழுவினர் அங்கிருந்து மொத்தமாக காலி செய்துவிட்டனர். அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் வேறு ஒரு தளத்தில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இதற்கிடையே, இயக்குநர் மற்றும் பத்மாவதி படப்பிடிப்பில் அத்துமீறி தாக்குதல் நடத்திய கர்னி அமைப்பு மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க பத்மாவதி படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்திருக்கிறார்.