பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
இன்றும் கூட பாலிவுட்டை பொறுத்தவரை துணிச்சலான கதாநாயகி வேடம் என்றாலும் ஒரு கதையையே தன தோளில் தூக்கி சுமக்கும் நாயகி வேடம் என்றாலும் முன்னி இயக்குனர்களின் முதல் சாய்ஸ் ஆக இருப்பவர் வித்யாபாலன் தான். கேரள மாநிலம் பாலக்கட்டை சொந்த ஊராக கொண்ட வித்யாபாலன்.. மனசெல்லாம் படத்தில் முதலில் த்ரிஷாவுக்கு பதிலா ஒப்பந்தமானவர்தான். ஆனா ஷூட்டிங் டைம்ல ஒரு சின்ன விபத்து ஏற்பட, சென்டிமென்ட் காரணமாக படத்தில் இருந்தே வித்யாபாலனை தூக்கிவிட்டார்கள்..
தமிழுக்கு வருவதற்கு முன்பே மலையாளத்தில் தான் அவருக்கு முதல் வாய்ப்பு தேடிவந்தது.. அதுவும் மோகன்லாலுக்கு ஜோடியாக 'சக்ரம்' என்கிற படத்தில் நடிக்கும் அதிர்ஷ்ட வாய்ப்பு. சினிமா பற்றி நிறைய கண்டிப்புகளை வைத்திருந்த வித்யாபாலனின் பெற்றோர் கூட, மோகன்லால் படம் என்பதால் தான் வித்யாபாலனை நடிக்கவே சம்மதித்தனராம். ஆனால் சில சூழ்நிலையால் அந்தப்படம் முதலில் கைவிடப்பட்டு பின் இயக்குனர், ஹீரோ ஆகியோர் மாறியதில் வித்யாபாலனின் வாய்ப்பும் பறிபோனது.
அதன்பின் தமிழுக்கு வந்தவருக்கு இங்கேயும் அதேபோல கசப்பான நிகழ்வுகள் ஏற்பட அதிர்ஷ்ட தேவதை பாலிவுட்டுக்கு கொண்டுபோய் சேர்த்து, இந்தி சினிமாவின் கனவுக்கன்னியாகவும் மாற்றியதெல்லாம் நாம் அறிந்த வரலாறுதான்..