தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பொதுவாக எந்த ஒரு விருது வழங்கும் விழா என்றாலும் அந்த விழா மேடையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இளைஞர்களின், இளம் நடிகர்களின் பங்களிப்புதான் அதிகம் இருக்கும்.. தமிழ்நாட்டை பொறுத்தவரை சீனியர் நடிகர்களான ரஜினி, கமல் மட்டுமின்றி இளம் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, தனுஷ் உள்ளிட்டவர்களே மேடையில் ஏறி இரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அதற்கே கைதட்டலை அள்ளிவிட்டு இறங்கி விடுவார்கள். முன்பெல்லாம் போனால் போகிறதென்று மேடையில் லைட்டாக சில நொடிகள் டான்ஸ் மூவ்மென்ட் பண்ணிய விஜய், இப்போது இரண்டொரு வரிகளில் தனது பட பாடல் ஒன்றை பாடிவிட்டு கும்பிடு போட்டு விடுகிறார்..
ஆனால் மலையாள திரையுலகில் நடைபெறும் விழாக்களில் சூப்பர்ஸ்டார்கள் முதற்கொண்டு தங்களது பங்களிப்பை தந்தே ஆகவேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அதற்கேற்ற மாதிரி சமீப காலம் வரை சூப்பர்ஸ்டார் மோகன்லால் மேடையில் நடனம் ஆடி ரசிகர்களை மகிழ்வித்து வந்தார்.. தற்போது அதற்கெல்லாம் ஒருபடி மேலாக லைவ்வாக சண்டைக்காட்சியில் நடித்து ரசிகர்களுடன் சேர்த்து இளம் நடிகர்களையும் வாய்பிளக்க வைத்திருக்கிறார்.
சமீபத்தில் நடைபெற்ற 19வது ஏசியாநெட் விருது வழங்கும் விழாவில் ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதமாக 'புலி முருகன்' பட கிளைமாக்ஸ் சண்டையையும் அதில் ரசிகர்களை மிகவும் பிரமிப்பில் ஆழ்த்திய ரிஸ்க்கான மூவ்மென்ட்டுகளையும் மேடையில் இரண்டு நிமிடங்களுக்கு மேலாக அனாயசமாக செய்துகாட்டினார்.. இதுநாள்வரை 'புலி முருகன்' படத்தில் அவர் சண்டைக்காட்சிகளில் டூப் போட்டு தான் நடித்திருப்பாரோ என்று நினைத்தவர்களுக்கு, கொஞ்சநஞ்சம் இருந்த சந்தேகமும் விலகியிருக்கும் என்பது உறுதி.