விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | இன்ஸ்டா கணக்கை டெலிட் செய்தாரா யுவன்? | அதிக எதிர்பார்ப்பில் வெளியாகும் வீட்டுக்கு வீடு வாசப்படி சீரியல்! | மிஸ்டர் மனைவி சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தேப்ஜானி மோடக் | இளையராஜா எல்லோருக்கும் மேலானவர் இல்லை : ஐகோர்ட் கருத்து | இசை ஆல்பத்தில் அஞ்சு குரியன் |
அவள் பெயர் தமிழரசி படத்தில் அறிமுகமானவர் வித்யா. அதன் பிறகு விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2, படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான அச்சமின்றி படத்தில் சமுத்திரகனி ஜோடியாக நடித்தார். தற்போது அசுரகுலம், தலகால் புரியல, ஒத்தைக்கு ஒத்த படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது கன்னடப் படத்திலும் அறிமுகமாகிறார். பங்கரா சன் ஆஃப் பங்காரத் மனுஷ்யா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவர் சிவராஜ்குமார் ஜோடியாக நடித்துள்ளார். "அச்சமின்றி படத்தில் வாய்பேச முடியாத பெண்ணாக நடித்தேன். அதுபோன்ற சவாலான கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். சீனியர் நடிகர் சமுத்திரகனியுடன் நடித்தபோது பல விஷயங்களை அவர் மூலம் கற்றுக் கொண்டேன். கன்னட படத்தில் நடித்திருப்பதன் மூலம் தென்னிந்திய நடிகை ஆகிவிட்டேன்" என்கிறார் வித்யா.