அமெரிக்காவில் பைக் விபத்தில் காயம் அடைந்த அனுஷ்கா பட ஹீரோ | சித்தார்த்-அதிதி ராவ்-க்கு நயன்தாரா வாழ்த்து | துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி |
ஓம் புரியாக நடிக்க என்னை விட யாரும் சிறந்தவர்கள் இருக்க முடியாது என்று நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார். பாலிவுட்டின் பிரபல நடிகரான ஓம் புரி சமீபத்தில் இறந்தார். இவரது மரணத்தில் சந்தேகம் இருந்து வருகிறது. இந்நிலையில் ஓம் புரியின் மறைவுக்கு மும்பையில் இரங்கல் கூட்டம் நடந்தது. இதில் நடிகர் மனோஜ் பாஜ்பாயும் கலந்து கொண்டார். அங்கு அவர் பேசியதாவது... ‛‛ஓம் புரியுடன் நெருங்கி பழகியவன் என்ற முறையில் சொல்கிறேன், அருடைய ரோலில் என்னை விட யாரும் சிறந்து நடிக்க முடியாது. அவரைப்பற்றி படம் எடுத்தால் அதில் நான் நடிப்பேன். அவரின் இரங்கல் கூடத்தில் பங்கேற்றது மகிழ்ச்சி. அவரைப்பார்த்தாலே ஒருவர் மனதில் உள்ள அழுத்தம் எல்லாம் குறைந்துவிடும், அந்தளவுக்கு எல்லோரிடத்திலும் எளிமையாகவும், அன்பாகவும் பேசக்கூடியவர். சிறு கிராமத்திலிருந்து வந்து பெரிய நடிகனாக வர வேண்டும் என்று கனவோடு இருப்பவர்களுக்கு ஓம் புரி ஒரு முன்னுதாரணம்'' என்று கூறியுள்ளார்.