ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக போராட்டம் நடந்து வந்த நிலையில், பல ஊர்களுக்கு நேரடியாக சென்று போராட்ட களத்தில் போராடியவர் ஜிவி பிரகாஷ் குமார். தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரலும் கொடுத்து வந்தார். இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்கப்பட்டும் சென்னை, மதுரை உள்ளிட்ட சில ஊர்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அவர்களை போலீசார் அப்புறப்படுத்த முயன்றனர். சில இடங்களில் வன்முறை சம்பவம் நடந்தது.
இந்நிலையில் இதுப்பற்றி ஜி.வி.பிரகாஷ்குமார் கூறியிருப்பதாவது... “அரசுகள் உங்களாலே அவசர சட்டம் இயற்றி பணிந்தது, போராட்டம் வரலாறு ஆனது. இன்னும் தீர்க்கப்படாத நிறைய பிரச்சனைகள் முன்னெடுத்து செல்ல வேண்டியவர்கள் நீங்களே. தமிழக மக்களின் மிச்சமிருக்கும் ஒரே நம்பிக்கை என் அன்பு சகோதர சகோதரிகளே நீங்கள் மட்டுமே. தயவு செய்து பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். அதோடு, வன்முறை சம்பவம் தொடர்பாக அவர் பேசுகையில், காவல்துறைக்குப் பயிற்சியளிக்கும் போது, "கல்" எறிய கற்றுத் தருகிறார்களா..? தலைமையில்லாமல் தானாக முன்வந்து தங்கள் உரிமைக்காக மக்களே போராடும் போது, அதை அரசு எப்படி அணுக வேண்டும்..?” என்று கூறியுள்ளார்.