ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சினிமா நடிகர், நடிகைகள் யாருக்கும் தெரியாமல் மெரினா பீச்சுக்கு சென்று ஜல்லிக்கட்டு தடைக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள். சின்னத்திரையிலிருந்து நீயா நானா கோபிநாத் நேற்று முன்தினம் நள்ளிரவு மெரினா கடற்கரைக்கு சென்று அங்கு போராடும் மாணவர்களுடன் இரண்டற கலந்து போராட்டத்தில் ஈடுபட்டு திரும்பியிருக்கிறார்.
போராட்டம் குறித்து அவர் கூறியிருப்பதாவது: இது இளைஞர்களின் காலம். கட்டுக்கோப்பாக, அமைதியாக தங்கள் போராட்டத்தை நடத்துகிறார்கள். பொதுவாக எந்த போராட்டமாக இருந்தாலும் ஒரு பகல், ஒரு இரவில் முடிந்து விடும். ஆனால் இது உலக சரித்திரத்தில் இடம்பெறுகிற அளவிற்கு நடந்துள்ளது. இவ்வளவு அமைதியான, நேர்மையான போராட்டம் வேறு எங்குமே நடந்திருக்காது இளைஞர்களுக்கு பின்னால் உலகம் பயணிக்கத் தொடங்கிவிட்டது என்பதையே இது காட்டுகிறது. என்றார்.