டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக சென்னை மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும், தமிழ் மக்களும் குடும்பம் குடும்பமாகப் போராடி வந்தார்கள். இன்று காலை முதல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் ஆரம்பமான நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. சாலை பக்கம் மணலில் அமர்ந்திருந்த போராட்டக்காரர்களில் பலர் விரட்டப்பட்ட நிலையில், மேலும் பலர் கடலை நோக்கி சென்று போராட ஆரம்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு பக்க பலமாக மீனவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வரும் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது... “யார் ஒருவர் கண்ணியம் தவறினாலும், அது சங்கமித்திருக்கும் அனைவரையும் பாதிக்கும். வாழ்த்துக்கள் விமர்சனமாகாதிருக்க விரசக் கேலிகளை தவிர்க்கவும்”. என்று கமல் கூறியுள்ளார்.