ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
டோலிவுட்டின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 திரைப்படம் பொங்கலை முன்னிட்டு திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. தமிழில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்த கத்தி திரைப்படம் தெலுங்கில் சிரஞ்சீவி நடிப்பில் கைதி நம்பர் 150 திரைப்படமாக உருவானது. இயக்குனர் விவி விநாயக் இயக்கத்தில் உருவான கைதி நம்பர் 150 படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் சிரஞ்சீவியுடன் பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் கலந்து கொண்டார். விழாவில் பேசிய சிரஞ்சீவி, இப்படத்தில் அமிதாப் பச்சனை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க தான் ஆசைப்பட்டதாகவும் ஆனால் அவருக்கேற்ற வகையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரம் கைதி நம்பர் 150 படத்தில் இல்லாததால் அமிதாப்பை நடிக்க வைக்க முடியாமல் போனதாக சிரஞ்சீவி கூறினார். சிரஞ்சீவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்த இப்படம் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணின் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படம் ஆகும்.