கார் விபத்தில் மயிரிழையில் உயிர் தப்பிய 'பேமிலி ஸ்டார்' பாடகி | ஆடுஜீவிதம் பட விழாவில் ஏ.ஆர்.ரஹ்மானின் தந்தைக்கு மோகன்லால் புகழாரம் | ஜப்பானில் 'ஆர்ஆர்ஆர்' படத்தின் ஸ்பெஷல் ஸ்கிரீனிங் | 'கல்கி 2898 எடி' தள்ளிப் போனால் 'புஷ்பா 2' தள்ளிப் போகுமா? | போட்டி இல்லாமல் வரும் ஜிவி பிரகாஷின் 'ரெபல்' | நடிகை அருந்ததி நாயர் விபத்தில் படுகாயம் | விமான நிலையத்தில் விஜய்யை பார்க்க படையெடுத்த கேரளத்து ரசிகர்கள் | தவறாமல் ஜனநாயக கடமை ஆற்றுங்கள் : ஜெயம் ரவி | ஜிம்மில் வெறித்தனமான ஒர்க்கவுட்டில் இறங்கிய ரகுல் ப்ரீத் சிங் | டப்பிங் யூனியன் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற ராதாரவி |
சி3 படத்தை விளம்பரப்படுத்தவே நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடுகிறார் என்று பீட்டா கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டாவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் சூர்யா.
நடிகர் சூர்யா தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஆதரித்து வருகிறார். ஆனால் பீட்டா அமைப்பின் நிர்வாகி நிகுஞ்ச் சர்மா என்பவர், பட விளம்பரத்துக்காகவே ஜல்லிக்கட்டை சூர்யா ஆதரிப்பதாக பேசினார். இது சூர்யா ரசிகர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பீட்டாவிற்கு எதிராக கடும் கண்டனங்களை சூர்யா ரசிகர்கள் தெரிவித்தனர்.
அதோடு இந்த சம்பவம் சூர்யாவையும், சூர்யா குடும்பத்தையும் மிகவும் வருத்தமடைய செய்திருக்கிறது. அதனால் ஜல்லிக்கட்டுக்காக தன் சி3 புரொமோஷனையும் தள்ளி வைத்தார் சூர்யா. இந்நிலையில், தவறான செய்தியை பரப்பி வரும் பீட்டா அமைப்பை மன்னிப்பு கோரும்படியும், அவர்கள் பரப்பிய செய்தி தவறானது என்பதை தெரிவிக்கும் வகையில் பிரஸ் ரிலீஸ் ஒன்றை 7 நாட்களுக்குள் வெளியிடும்படியும் கூறி நடிகர் சூர்யா சார்பில் அவரது வக்கில் ஆர்.விஜய் ஆனந்த், பீட்டா அமைப்புக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.