டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தெலுங்கு திரை உலகின் மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தை இயக்கிய இயக்குனர் விவி விநாயக் தனது அடுத்த படத்தில் கவனம் செலுத்த துவங்கிவிட்டார். தமிழில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய கத்தி படத்தை தெலுங்கில் கைதி நம்பர் 150 என்ற தலைப்பில் இயக்குனர் விவி விநாயக் இயக்கி வெற்றி கண்டார். இப்படத்தைத் தொடர்ந்து, மெகா குடும்பத்தைச் சேர்ந்த மற்றொரு ஹீரோவான சாய் தரண் தேஜ்ஜை தனது அடுத்த படத்தின் நாயகனாக விவி விநாயக் தேர்வு செய்துள்ளார்.
விவி வி நாயக் கூறிய கதை பிடித்துப்போனதால் இப்படத்தில் நடிக்க சாய் தரண் தேஜ் உடனடியாக சம்மதம் தெரிவித்துவிட்டாராம். மார்ச் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் துவங்கும் என கூறப்படுகின்றது. இயக்குனர் கிருஷ்ண வம்சியின் நக்ஷத்ரம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் சாய் தரண் தேஜ் வின்னர் படத்தில் நாயகனாக நடித்து வருகின்றார். வின்னர் படத்தின் வெளியீட்டிற்கு பின்னர் சாய் தரண் தேஜ், இயக்குனர் விவி விநாயக் இயக்கும் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.