பாலிவுட்க்கு செல்லும் சுந்தர்.சி! | விஜய் மகனை நிராகரித்த சிவகார்த்திகேயன்! | இளையராஜா பயோபிக் படத்தை குறித்து புதிய தகவல் இதோ! | நடிகை பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வைரல் | அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிப்போன கமலினி முகர்ஜி | 'பிரேமலு' பிரபலம் மமிதா பைஜு தமிழிலும் பிரபலம் ஆவாரா? | சூர்யாவின் 'கங்குவா' டீசர் இன்று மாலை வெளியீடு; பரபரப்பை ஏற்படுத்துமா? | நாங்கள் தாசிகள் தான்! சின்னத்திரை நடிகை தீபாவின் உருக்கமான பேச்சு | மீண்டும் சீரியலில் கம்பேக் கொடுத்த ஸ்ருதி சண்முகப்ரியா! | ஓடிடியிலும் சாதனை படைக்கும் 'ஹனுமான்' |
ஜல்லிகட்டுக்கு எதிரான போராட்டம் புரட்சியாக மாறி உள்ள நிலையில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு எதிரான உணர்வும் தலைதூக்கி உள்ளது. போராட்ட களத்தில் வெளிநாட்டு குளிர்பானங்களை தரையில் கொட்டி போராட்டம் நடத்தி வருகிறார்கள். எவ்வளவு தாகமாக இருந்தாலும் அதை குடிக்க மறுத்து வருவதோடு அதை கொண்டு வருபவர்களையும் துரத்தியடிக்கிறார்கள்.
இதனால் இனி கடைகளில் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்க மாட்டோம் என்று வியாபாரிகள் அறிவித்துள்ளனர். இதைத்தொடர்ந்து தியேட்டர் கேன்டீன்களில் இனி வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என்ற முடிவை தியேட்டர் அதிபர் சங்கமும் எடுக்க இருக்கிறது. சங்கத்தின் முடிவுக்கு முன்பே மதுரை, ராமநாதபுரம், விருது நகர் மாவட்டங்களில் உள்ள பல தியேட்டர்களில் வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடைவிதித்து உள்நாட்டு குளிர்பானங்களை விற்கத் தொடங்கி விட்டனர். விரைவில் கூட இருக்கும் தியேட்டர் அதிகபர்கள் சங்க செயற்குழுவில் இதற்கான முடிவு அறிவிக்கப்பட இருப்பதாக சங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.