தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஒரு காலத்தில் மலையாள சினிமா ஒரு கோடிக்குள் எடுக்கப்படும், அது 3 கோடி வசூலித்தாலே வெற்றி என்பார்கள். ஆனால் இன்றைக்கு மலையாள சினிமாவின் லெவலே வேற. துணிச்சலாக 35 கேடி செலவில் புலிமுருகன் எடுத்தார்கள். 150 வசூலித்து சாதனை படைத்ததோடு மலையாள சினிமாவின் வியாபார தளத்தை விரிவுப்படுத்தியது. அதைத் தொடர்ந்து மலையாள சினிமா தற்போது பிரமாண்ட தளத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.
இதன் அடுத்த பாய்ச்சலாக வரப்போகிறது ரெண்டமூழம், மலையாள திரைக்கதை ஜாம்பவான் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய நாவல் அதே பெயரில் இப்போது படமாகிறது. இது மகாபாரத்தின் ஒரு பகுதியான குருஷேத்திரத்தை மையமாக வைத்து எழுதப்பட்டது. பாகுபலி போன்ற பிரமாண்டத்துடன் 2 பாகங்களாக வெளிவர இருக்கிறது.
வார்னர் பிரதர்ஸ், ரிலையன்ஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனங்களுடன் மோகன்லால் கைகோர்த்திருக்கிறார். படத்தின் உத்தேச பட்ஜெட் 200 கோடி. மோகன்லாலுடன், மம்முட்டி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், விக்ரம், நாகார்ஜுனா, சிவராஜ்குமார், மஞ்சு வாரியார் நடிக்க இருக்கிறார்கள். இத்தனை மொழி நடிகர்கள் நடிக்க காரணம் படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மொழிகளில் தயாராகிறது.
ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்கிறார், பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகளை அமைக்கிறார். விளம்பர பட இயக்குனரும், மோகன்லாலின் நண்பருமான ஸ்ரீகுமார் இயக்குவார் என்கிறார்கள். மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது. கிராபிக்ஸ் காட்சிகள் அமைக்க பல நாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் போடப்பட்டு வருகிறது. 2019ம் ஆண்டு தீபாவளிக்கு முதல் பாகத்தை வெளியிட இலக்கு நிர்ணயித்து பணியாற்றி வருகிறார்கள்.