ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு ஜல்லிகட்டிற்காக போராடி வரும் சூழலில் தமிழ் திரை உலக நடிகர்களும் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்நிலையில் டோலிவுட்டின் யங் சூப்பர் மகேஷ் பாபு ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக தனது கருத்தை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். மகேஷ் பாபு தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் ஜல்லிக்கட்டு தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு. தமிழர்களின் தைரியம் மற்றும் துணிச்சலின் அடையாளம். தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்திற்காக ஒன்றிணைந்து போராடி வருவது அதிலும் குறிப்பாக தமிழக மாணவர்களது ஓயாத போராட்டம் பெருமிதம் கொள்ளச்செய்கின்றது. ஜல்லிக்கட்டிற்காக போராடி வரும் தமிழக மக்களுக்கு தானும் துணை நிற்பதாக குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் ஆக்ஷன் திரில்லரில் மகேஷ் பாபு தற்போது நடித்து வருகின்றார். தமிழகத்தில் பிறந்து வளர்ந்த மகேஷ் பாபு சென்னையில் தனது பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.