விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் |
துருவா படத்தின் வெற்றிக்கு பின்னர் இயக்குனர் சுகுமார் இயக்கும் புதிய படத்தில் ராம் சரண் நடிக்கவுள்ளார். கிராமத்து பின்னணியில் உருவாகவிருக்கும் இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக அனுபமா பரமேஷ்வரன் மற்றும் ராக்ஷி கண்ணா என இரு நாயகிகள் நடிக்கின்றனர். மைதிரி மூவீஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஜனவரி 30ல் துவங்கும் என கூறப்படுகின்றது. தனது தந்தை சிரஞ்சீவியின் 150வது திரைப்படமான கைதி நம்பர் 150 படத்தை தயாரித்துக் கொண்டே துருவா படத்தில் நடித்ததுபோல், சிரஞ்சீவியின் 151வது படத்தை தயாரிக்கவுள்ள ராம் சரண் அப்படத்துடன் சுகுமார் படத்தில் நாயகனாகவும் நடிக்கின்றாராம். படப்பிடிப்பு தளங்களை தேர்வு செய்து வரும் இயக்குனர் சுகுமார் கூடவே தொழில் நுட்ப கலைஞர்களுக்கான தேர்விலும் ஈடுபட்டுள்ளார்.