ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் |
ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகத்தில் அடுத்த லெவலுக்கு சென்று கொண்டு இருக்கிறது. திரையுலகின் பல பிரபலங்களும் ஜல்லிக்கட்டு தொடர்பாக தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர். ரஜினி, கமல், விஜய், சிவகார்த்திகேயன், சிம்பு, ஜெயம் ரவி, விஷால், ஆர்யா... என பலரும் ஆதரவு தெரவித்துள்ளனர். பல நடிகர்கள் களத்தில் இறங்கி போராடியும் வருகின்றனர். ஆனால் இந்த விஷயத்தில் நடிகர் அஜித், இதுவரை ஒரு சின்ன அறிக்கை கூட வெளியிடாமல் இருக்கிறார். இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நாளை நடிகர் சங்கம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற இருக்கிறது. இதில் அனைத்து நடிகர்களும் பங்கேற்பார்கள் என பொன்வண்ணன் தெரிவித்திருக்கிறார். நாளை நடைபெறும் போராட்டத்தில் அஜித் பங்கேற்பாரா...? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், நிச்சயம் அவர் நாளை நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பார் என அஜித்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் உறுதிப்பட தெரிவிக்கின்றனர். பொறுத்திருந்து பார்ப்போம்...!