மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி |
தமிழ், தெலுங்கு இரண்டு திரையுலகமும் ஒன்றாகவே வளர்ந்த சகோதரர்கள்தான். தெலுங்குப் படங்களின் தயாரிப்பு 80கள் வரை சென்னையில்தான் இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். தமிழில் ஹிட்டாகும் படங்கள், தெலுங்கில் ரீமேக் செய்யப்படுவதும், தெலுங்கில் ஹிட்டாகும் படங்கள், தமிழில் ரீமேக் செய்யப்படுவதும் காலம் காலமாக இருந்து வரும் ஒன்று.
தெலுங்கில் சமீபத்தில் வெளிவந்த சில கமர்ஷியல் படங்கள் தமிழிலிருந்து ரீமேக் செய்யப்பட்டவைதான். குறிப்பாக ராம்சரண் நடித்து வெளிவந்து வெற்றி பெற்ற 'துருவா' படம், அவருடைய அப்பா சிரஞ்சீவி நடித்து கடந்த வாரம் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற 'கைதி நம்பர் 150' படம் ஆகியவை தமிழ்ப் படங்களின் ரீமேக்தான். சிரஞ்சீவி தம்பி பவன்கல்யாண் நடித்து விரைவில் வெளிவர உள்ள 'கட்டமராயுடு' படமும் தமிழ் ரீமேக்தான். இந்தப் படமும் பெரிய வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால், தமிழில் வெளிவந்து வெற்றி பெற்ற, வரவேற்பைப் பெற்ற படங்களின் ரீமேக் உரிமைகளை வாங்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாம். அதிலும் குறிப்பாக நல்ல கதையம் உள்ள படங்களை வாங்க தெலுங்குத் தயாரிப்பாளர்கள் முன் வந்திருக்கிறார்களாம். ஒரு படத்தின் வெற்றிக்கு கதைதான் முக்கியம் என்பதை அனைத்து மொழி ரசிகர்களுமே நிரூபித்து வருகிறார்கள்.